சென்னை

ன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிகப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை அன்று விடுமுற விடுவது வழக்க்மாகும்,  ஆனால் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி, ஆகஸ்ட் 3 ஆம் தேதியான இன்ற பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக மக்கள் தங்கள் அசையா சொத்து குறித்த பத்திரப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள விரும்புவதால், பொது விடுமுறை நாளான ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பத்திரப்பதிவு மேற்கொள்ள அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணி முதல் பத்திரப்பதிவு முடியும் வரை அலுவலகங்கள் செயல்பாட்டில் இருக்கும். அனைத்து பதிவு அலுவலகங்களிலுந்த விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவுக்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.