சென்னை:
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுடன், 9 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Patrikai.com official YouTube Channel