டெல்லி

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுந்ர் சக்தி காந்த தாஸ் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பிரதமரின் பதவிக்காலம் வரை அவர் பதவியில் நீடிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 6 ஆண்டுகள் பதவி வகித்து கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவருக்கு பிரதமரின் முதன்மை செயலாளர் என்ற பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஐஏஏஸ் அதிகாரியான பிவிஆர் சுப்ரமணியம் நிதி ஆயோக் தலைவராக இரண்டு ஆண்டுகள் பதவிக்காலத்துடன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் நிறைவு பெற்றதால் அது மேலும் ஒராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.