புதுடெல்லி:
ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களைப் போலவே செல்வாக்கற்றவராக இருந்தார். அவருக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. இலங்கையின் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel