சென்னை: அன்புமணியை நீக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டது பாமக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த  நிலையில்  அன்புமணி  ஆதரவாளளர் வழக்கறிஞரும், எம்எல்ஏவுமான  பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை. அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது கட்சி விதிகளுக்கு எதிரானது என தெரிவித்து உள்ளார்.

பாமக விதிகளின்படி கட்சி நிர்வாக பணிகளை நிறுவனர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. பாமக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மட்டுமே நிர்வாக பணிகளை மேற்கொள்ள முடியும். அதனால்,  ராமதாஸ் அறிவிப்பு பாமகவை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது.

ஏற்கனவே ஆகஸ்டு 9ந்தேதி ந மாமல்லபுரத்தில் நடந்த பாமக பொதுக்குழுவில் பாமக தலைவர் அன்புமணியின் பதவியை நீட்டித்து தீர்மானம் போடப்பட்டது. அந்த  பொதுக்குழு முடிவுகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாமக கட்சி விதிப்படி நிறுவனர் நிர்வாக பணி மேற்கொள்ள முடியாது.  நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் நிறுவனருக்கு இல்லை. கட்சி தலைவரான  அன்புமணிக்கே  அந்த அதிகாரம் உள்ளது. இதை  தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்துள்ளது என்றார்.

அன்புமணியின் தலைவர் பதவிக்காலத்தை 2026 ஆகஸ்ட் வரை நீட்டிப்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பாமக சார்பில் ராமதாஸ் எந்த செய்தியையும் வெளியிட வேண்டாம். கட்சியின் விதிகள்படிதான் கட்சியை நடத்த முடியும் என்றவர் ராமதாஸ் குற்றச்சாட்டை மறுத்தார்.

அன்புமணிக்கு உளவு பார்க்கும் பழக்கம் என்பதே கிடையாது. அன்புமணி உளவு பார்த்ததாக கூறுவது தவறு என்று மறுத்தவர்,  இதுவரை பாமகவில் நிலவிய குழப்பத்துக்கு முடிவு கிடைத்துவிட்டது. தேர்தல் நேரத்தில் முடிவுஎடுக்கும் அதிகாரம் அன்புமணிக்கே உள்ளது என்றும்தெரிவித்தார்.