
சென்னை :
கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(டிசம்பர் -1 – வெள்ளி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 12 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் கனமழை தொடர்ந்து பெய்கிறது.
இதையடுத்து மாணவர்கள் நலன்கருதி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel