மும்பை:
சிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் தற்போது காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இம்மாதம் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபால், ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய அணியில் தற்போது மூன்று இடம்தான் பேட்டிங்கில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கில் ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் தங்களுடைய இடத்தை பிடித்துக் கொண்டுள்ளனர்.

ஆசிய கோப்பை போட்டியில் கே எல் ராகுலும் ஸ்ரேயாஸ் ஐயரும் இடம் பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதே போல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கும் இவர்கள் அணிக்கு திரும்புவது சந்தேகம் என கூறப்படுகிறது.

காரணம் உலகக் கோப்பை தொடர்க்கும் முன்பு தயாராகி விட்டாலும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் கிரிக்கெட் விளையாடாமல் இவ்வளவு பெரிய தொடரில் இவ்விரு வீரர்களையும் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் தயாராக இல்லை. இதனால் சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ் ஆகியோரை வைத்து உலகக் கோப்பையை விளையாட இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.