டெல்லி

ணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எழுப்பும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இறு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மணிப்பூர் மக்களின் நிலை குறித்து எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார்.

அதில் ராகுல் காந்தி,

”மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து நான் அங்கு 3 முறை சென்றிருக்கிறேன். இதுவரை துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இப்போதும் மாநிலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அங்கு இன்னும் வீடுகள் எரிவதும் அப்பாவிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளதும் தொடர்கிற்து.  பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வாழத் தள்ளப்படுகின்றனர்.

மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் சென்று, அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அமைதியை ஏற்படுத்த வேண்டும். உடனடியாக இந்த அவலத்திற்கு முடிவு கட்ட வேண்டும்

இது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணி கட்சிகளும் மணிப்பூரில் அமைதியின் அவசியத்தை பாராளுமன்றத்தில் முழு பலத்துடன் எழுப்பும்.”

என்று தெரிவித்துள்ளார்.