சிலிகுரி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக வெறுப்பை மட்டும் பரப்பி வருவதாக கூறி உள்ளார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடத்தி வரும் நடைப்பயணம் மேற்கு வங்காளத்தில் நடந்து வருகிறது. நேற்று அங்குள்ள சிலிகுரியில் பாதயாத்திரையாகச் சென்ற அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அஃகு உரையாற்றிய ராகுல் காந்தி :-
“வங்காளத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு. இந்த மாநிலம்தான் சுதந்திரப் போராட்டத்தின்போதே சித்தாந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது. தற்போதைய சூழ்நிலையில் வெறுப்புக்கு எதிராக போராடுவதற்கும், தேசத்தைப் பிணைப்பதற்கும் வழி காட்டுவது வங்காளம் மற்றும் வங்காளிகளின் கடமை ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் இதை எழுப்பவில்லை என்றால், மக்கள் ஒருபோதும் உங்களை மன்னிக்கமாட்டார்கள்.
ஆயுதப்படைக்குக் குறுகிய கால ஆட்சேர்ப்பு திட்டமான அக்னி வீரர்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி, ஆயுதப்படையில் சேர விரும்பிய இளைஞர்களை மத்திய அரசு கேலிக்கூத்தாக்கி உள்ளது.நாடு முழுவதும் வெறுப்பும் வன்முறையும் பரவி வருகிறது. இது எந்த நோக்கத்திற்கும் உதவாது. வெறுப்பைப் பரப்புவதற்குப் பதிலாக, நம் இளைஞர்களுக்கு அன்பையும், நீதியையும் பரப்புவதற்கு நாம் உழைக்க வேண்டும். 
மத்திய அரசு பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. மாறாக ஏழைகள் மற்றும் இளைஞர்களின் நலன்களை புறக்கணிக்கிறது.
என்று கூறினார்.