ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படத்தில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு இருவரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘மாஃபியா’ படத்துக்குப் பிறகு அருண் விஜய் – ப்ரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

பிரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். அவர்தான் ராதிகா சரத்குமார், இவர் அனேகமாக ப்ரியா பவானிசங்கர் தாயாராக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ராதிகா இந்த படத்தில் இணைந்தது குறித்த முறையான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.