கிறிஸ்துவர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாளில் இலங்கை கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலா் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியாா் தேவாலயத்திலும், நீா்கொழும்புவில் உள்ள மற்றொரு தேவாலயத்திலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன. அதே போன்று நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 6 பகுதிகளில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ட் விட்டரில் நடிகை ராதிகா, “OMG இலங்கையில் குண்டு வெடிப்பு… நான் கொழும்புவின் சின்னமோகன் கிராண்ட் ஹோட்டலில் தான் தங்கி இருந்தேன். சிறிது நேரத்திற்கு முன்னர் தான் அங்கிருந்து கிளம்பினேன். என்னால் நம்பவே முடியவில்லை அதிர்ச்சியில் இருக்கின்றேன்.” என பதிவிட்டுள்ளார்.