மாஸ்கோ

இந்தியப் பிரதமர் மோடி ரஷ்யா வந்தால் தாம் மகிழ்ச்சி அடைவதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார் அவர் மாஸ்கோ சென்றடைந்த உடன் அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் இரு தரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்று அமைச்சர் ஜெய்சங்கர் , ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்துப் பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை அடுத்த ஆண்டு ரஷ்யாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த அதிபர் புதின், தற்போதைய அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான கண்ணோட்டத்தைப் பற்றிப் பேசவும் வாய்ப்பளிப்பதாக தெரிவித்திருந்தார்.

புதின் மத்திய அமைச்சரிடம்,

“எங்கள் நண்பரான பிரதமர் மோடியை ரஷ்யாவில் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். பிரதமர் மோடியின் பயணத்தின் போது, நாங்கள் அனைத்து தொடர்புடைய, தற்போதைய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடியும் மற்றும் ரஷிய மற்றும் இந்திய உறவின் வாய்ப்புகள் குறித்துப் பேச முடியும்” 

என்று தெரிவித்துள்ளார்.