சென்னை: கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை மற்றும்  புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை (13ம் தேதி) மாலை திறக்கப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின்போது சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜை நடைபெறும்.  அதன்படி, புரட்டாசி மாத பிறப்பை யொட்டி, நாளை (13ந்தேதி) மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவில் தந்தரி நாளை மாலை நடை திறந்து சிறப்பு பூஜைகள் செய்கிறார்.

இந்த முறை கேரளாவின் ஓணம் பண்டிகையையும் வருவதால், கோவை நடை தொடர்ந்து 8 நாட்கள் திறந்திரக்கும் என்று தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது. அதன்படி, நாளை மாலை முதல், வரும் . 21ம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் கோயில் நடை திறந்திருக்கும் என்றும்,  நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி பிரம்மதத்தன் நம்பூதிரி முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோயில் நடை திறப்பார் என்று கூறப்பட்டள்ளது.

நாளை மறுநாள் (14ம் தேதி) முதல் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் தொடங்கும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் பக்தர்களுக்கு ஓணம் விருந்து அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,.  வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். கோவிலுக்கு வருபவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் வசதிக்காக  நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் திறக்கப்படும் என்றும் தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.