டெல்லி:
மனநல மருத்துவ சிகிச்சைக்கம் மருத்துவ காப்பீட்டை ஏன் நீட்டிக்கக் கூடாது? என இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மத்தியஅரசு வழங்கி வரும் மருத்துவ காப்பீட்டில் மனநல மருத்துவ சிகிச்சையும் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இதையடுத்து, மனநல மருத்துவ சிகிச்சைக்கம் மருத்துவ காப்பீட்டை ஏன் நீட்டிக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு மத்திய அரசும் பதில் அளிக்க இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
Patrikai.com official YouTube Channel