மொராதாபாத்

காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக கூறி உள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பாரத் ஜோடோ நியாய என்னும் பெயரில் பாத யாத்திரை நடத்தி வருகிறார்.  இந்த யாத்திரைக்கு நாடெங்கும் நல்ல வரவேற்பு உள்ளது.  தற்போது இந்த யாத்திரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது

நேற்று உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத்தில்  ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் அவரது சகோதரியும் காங்கிரஸ் செயலாளருமான பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

பிரியங்கா காந்தி,

“உத்தரப் பிரதேச காவல்துறைக்கு 28 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். ஆனால் வினாத்தாள் கசிந்தது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்ததால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 

உங்களுக்கு வேலை கிடைக்காத வரை வசதிகள் கிடைக்காது. வினாத்தாள் கசிவு நிறுத்தப்படவில்லை. நாட்டில் வளர்ச்சியும் ஏற்படாது. உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் வாக்களிக்கும் போதுதான் மாற்றம் ஏற்படும்” 

என்று உரையாற்றினார்.