2010 மற்றும் ‘16 ஆண்டுகளில் யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் யுனிசெஃப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருது வழங்கும் விழா டிசம்பர் 3-ஆம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறுகிறது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “நெகிழ்ச்சியாக உணர்கிறேன். டானி கே மனிதாபிமான விருது கொடுத்து என்னை கவுரவித்த யுனிசெஃப் அமைப்புக்கு நன்றி. குழந்தைகளின் அமைதியான எதிர்காலத்துக்காக, சுதந்திரத்துக்காக, கல்வி உரிமைக்காக (இந்த விருது போய் சேரட்டும்)” என்று பதிவிட்டுள்ளார்.