
தனது மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கப்பட்டதற்கு நடிகர் பிருத்விராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யாரோ ஒருவர் பிருத்விராஜ் மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை உருவாக்கி அதில் அந்தப் புகைப்படங்களையும், பழைய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் பிருத்விராஜ் மற்றும் அவரது மனைவி சுப்ரியா இருவரால் நிர்வகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
”இந்தப் போலியான பக்கம் குறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்தப் பக்கத்தை நாங்கள் நிர்வகிக்கவில்லை. ஒரு ஆறு வயதுக் குழந்தைக்கு சமூக வலைதளப் பக்கத்தை உருவாக்குவதற்கான எந்தத் தேவையும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. அவர் வளர்ந்ததும் அதுகுறித்து அவர் முடிவு செய்து கொள்வார். எனவே, இதுபோன்றவற்றை நம்ப வேண்டாம்’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
https://www.instagram.com/p/CHYQMA-AjKr/
[youtube-feed feed=1]