ண்டன்

கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் நோக்கில், இதயநோய் மருத்துவமனையை டியூக் இளவரசர் வில்லியம் காணொலி காட்சி வழியே திறந்து வைத்தார்.

பர்மிங்காம் நேஷனல் எக்சிபிஷன் சென்டரில் அமைந்துள்ள இம்மருத்துவமனை எட்டு நாளில் கட்டி முடிக்கப்பட்டது. 500 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனை விரைவில் 1500 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

தற்போது உலகில் பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிட்டனின் ஏழு பெரிய மருத்துவமனைகளில் இது இரண்டாவது பெரிய மருத்துவமனை ஆகும்.

பிரிட்டனில் கொரோனாத் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 13000 த்தை தாண்டியுள்ளது.