சென்னை: பிரதமர்மோடி வரும் 23ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில், நாகர்கோவில்-மங்களூர் இடையேயான அம்ரித் பாரத் ரயில் சேவையை வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி சென்னையில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கிறார் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி, வரும் 23ந்தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கிறார். முன்னதாக, நாகர்கோவில் – மங்களூர் அம்ரித் பாரத் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது, கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் முடிவடையும்போது கூடுதலாக ரயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும என்றும் தெரிவித்தார்.
மேலும், நாகர்கோவில்-மங்களூர் இடையேயான அம்ரித் பாரத் ரயில் சேவையை வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி சென்னையில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கிறார் என தெரிவித்தார்.
[youtube-feed feed=1]