கோவை
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்துக்கு மத்திய அர்சு நிதி தராததற்கு ஆதரவா என அரசியல் நோகர்கள் கேட்டுள்ளனர்.

நேற்று கோவை வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம்.
”தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டு காலமாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பல்வேறு கருத்துகளை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை சொல்லி கடந்த மூன்று ஆண்டு காலமாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின். தற்போது மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு, கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.
மூன்று ஆண்டுகாலம் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தால் தமிழகத்துக்கு தேவையான நிதியை பெற்று இருக்கலாம். புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடைத்து இருக்கலாம். மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை இந்த கூட்டத்தில் தெரிவித்து இருக்கலாம்.
நீலகிரி மாவட்டத்திற்கும் கோவை மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் விடுத்து இருக்கிறார்கள், கனமழை பெய்யும் என தெரிவித்து இருக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.”
என்று கூறி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதும், தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி, திட்டங்களில் மத்திய அரசின் பாரபட்சம் குறித்து அறிக்கை, பேட்டி அளித்து குற்றம் சாட்டி விட்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தபிறகு, ஒன்றிய அரசுக்கு ஆதரவாக பேசத் தொடங்கியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர்.