சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை வருபவர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர் இன்றுமுதல் 3 நாட்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளனர்.

இந்த ஆண்டுபொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டதால் பல லட்சம் பேர் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் இன்றுமுதல் மீண்டும் சென்னை திரும்புவார்கள். இதையடுத்து, சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பொங்கல் திருநாளை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வாகன நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. சிரமம் இன்றி மக்கள் சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இன்றுமுதல் பலர் சென்னை திரும்பும் நிலையில், சொந்த வாகனங்களிலும் பலர் இன்று சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்றுமுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதனால், சென்னையில் இன்று பிற்பகல் முதல் வாகன நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில், கூடுதலாக 500 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்எ ன அறிவித்து உள்ளது. நாளை அதிகாலை முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பஸ்களுடன் சேர்த்து மொத்தம் 982 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளியூரில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பரனூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளதுடன், திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக பயணிக்கவும். ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுபடுத்த ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோரின் வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்த காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி,
கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் செல்ல இன்று பகல் 2 மணி முதல் வரும் திங்கட்கிழமை வரை தடை விதிக்கப்படுகிறது.
வெளியூரில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பரனூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கனரக வாகனங்கள் இல்லா சாதாரண வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக பயணிக்ககும்படி கூறப்பட்டு உள்ளது.
பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பகல் 2 மணி முதல் வரும் திங்கட்கிழமை பகல் 12 மணி வரை சென்னை நோக்கி ஒருவழி போக்குவரத்தாக தேவைக்கு ஏற்ப மாற்றப்படுகிறது.
ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுபடுத்த ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும்.
இதனால், சிரமம் இன்றி மக்கள் சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]