நெட்டிசன் பகுதி:
சுவாதி கொலை வழக்கு குறித்து தொடர்ந்து பரபரப்பான பதிவுகளை முகநூலில் எழுதிவரும் பேஸ்புக் தமிழச்சி என்பவரின் சமீபத்திய  பதிவு:
சிறையில் ராம்குமாரை காவல்துறை கொலை செய்துள்ளது!!
சுவாதி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் இன்று 1 மணி நேரத்திற்கு முன்பு சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சுவாதி - பேஸ்புக் தமிழச்சி - ராம்குமார்
சுவாதி – பேஸ்புக் தமிழச்சி – ராம்குமார்

இது காவல்துறை நடத்திய திட்டமிட்ட படுகொலை. நாளை ஜாமீன் மனு விசாரணையில் நிச்சயம் விடுதலை செய்யப்படுவான் என்ற தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததும் இல்லாமல் பெரியார் இயக்க தொண்டர் படையினர் 150 பேர்களுக்கு மேல் தயாராக ராம்குமாரை பாதுகாக்க போகிறார்கள் என்ற தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதன் ஆபத்தை உணர்ந்து கொண்டு காவல்துறை ராம்குமாரை கொன்றுவிட்டது.
தமிழச்சி பதிவு
தமிழச்சி பதிவு

ராம்குமார் வெளியே வந்தால் காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்தது என்கிற உண்மையை அறிவிடுத்து விடுவான் என்ற பதற்றமே காவல்துறை சாகடிக்க காரணமாகவும் இருக்கிறது” என்று தனது முகநூல் பதிவில் எழுதியிருக்கிறார் தமிழச்சி என்பவர்.