டெல்லி
பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜிக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.

தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சிகாலம் போற்றப்படுகிறது.
இன்று சத்ரபதி சிவாஜியின் 395 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர்மோடி சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளையொட்டி அவரை மிகவும் புகழ்ந்துள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில்,
“சத்ரபதி சிவாஜியின் வீரமும் தொலைநோக்குத் தலைமையும் சுயராஜ்யத்திற்கு அடித்தளமிட்டன, தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகள் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது. அவர் ஒரு வலுவான, தன்னம்பிக்கை மற்றும் வளமான இந்தியாவை கட்டியெழுப்ப நம்மை ஊக்குவிக்கிறார்”
எனப் பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel