சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 77 ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டு  இருப்பதாக மத்திய ரயில்வேஅமைச்சர் அஸ்வினி வைஷ்வப் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அவையின் கேள்வி நேரத்தின் போது  தமிழக  காங்கிரஸ் கட்சியின் ஆரணி தொகுதி  எம்.பி. விஷ்ணு பிரசாத், தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே நிலையங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். இதற்கு  மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து பேசியதாவது:-

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், ரெயில் நிலையங்களை மேம்படுத்த நாட்டில் இதுவரை 1,337 ரெயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 77 ரெயில் நிலையங்களை இந்த திட்டத்தின்கீழ் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் விருத்தாசலம், திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையங்களும் அடங்கும். இதுவரை தமிழ்நாட்டில் 17 ரெயில் நிலையங்களில் இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது.

திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுக நிலையம், பெண்ணாடம் ரெயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் இந்த திட்டத்திற்காக கடந்த 4 ஆண்டு மற்றும் நடப்பாண்டில் ரூ.5 ஆயிரத்து 449 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.4 ஆயிரத்து 439 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

தமிழகத்தில் 60 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மறு சீரமைக்க திட்டம்! தெற்கு ரயில்வே

ரூ30 கோடியில் கிண்டி, பரங்கிமலை ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு! தெற்கு ரயில்வே தகவல்

 

[youtube-feed feed=1]