சென்னை: திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதில், தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழிக்கு ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. தி.மு.க தொடங்கப்பட்ட நாள் (செப்.17), தி.மு.க நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப். 15) மற்றும் திராவிட கருத்தியல் முன்னோடி தந்தை பெரியார் பிறந்தாள் (செப்.17) என மூன்றையும் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, , 2025ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா, கரூர் மாவட்டத்தில் வருகிற செப்டம்பர் 17ஆம் நாள் நடைபெற இருக்கிறது. இதை தி.மு.க தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திமு கழகத்தின் சார்பில் நடப்பாண்டில் முப்பெரும் விழாவின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரங்களையும் தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
‘பெரியார் விருது’
தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழிக்கு ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
அண்ணா விருது
தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும் – பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப. சீத்தாராமன்.
கலைஞர் விருது
நூற்றாண்டு கண்டவரும், அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும், அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா. இராமச்சந்திரன்.
பாவேந்தர் விருது
கழக மூத்த முன்னோடியும், தலைமைச் செயற்குழு உறுப்பினரும், குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமன்.
பேராசிரியர் விருது
கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் கொரடாவுமான மருதூர் இராமலிங்கம்.
மு.க.ஸ்டாலின் விருது
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமி அவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
