சென்னை: தலித் கேள்வி எழுப்பினால் பெரியாரிய சிந்தனையாளர்களுக்கும், திராவிட சிந்தாந்தவாதிகளுக்கும் கோபம் வருகிறது. அப்படி இருக்கும் போது தனக்கு வழங்கப்பட்ட பெரியார் விருது தேவையற்றது. அந்த பெரியார் விருதை திருப்பி அளிப்பதாக இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்பட வும் நேரிடலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.
அறம் என்ற திரைப்படத்தின் கதைக்காக பெரியார் விருது பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். கோபி நயினார் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் மனுசி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்காக அவருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. ஆனால், சமீபகாலமாக அரசுக்கு எதிராக அவர் போராடி வருவதால் அவருக்கு ஆளும் திமுக அரசு மற்றும் பெரியாரிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான நயினார், எனக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம், நிஜ வாழ்வில் அதனை நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்தரிக்கிறது என்றும், “தமிழ்நாட்டில் ஒரு தலித், ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை
அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் அதை நான் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்தரிக்கிறது; இது போன்ற காரணங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் வசித்து வருபவர் திரைப்பட இயக்குனர் கோபி நயினார். இவர் வசிக்கும் பகுதி உள்பட பல பகுதிகளில் தலித் மக்களுக்காக போராடி வருகிறார். எண்ணூரை அடுத்துள்ள அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், பழவேற்காடு பகுதியில் குவாரி அமைக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வரும், மற்றும் அந்த பகுதியில் நிலம் தோண்டும் பணியை மேற்கொண்டிருக்கும், ஆளும் கட்சியினருக்கு எதிராக போராடும் அநத் மக்களுக்கு ஆதரவாக கோபி நயினாரும் போராடினார்.
இதனால், அவருக்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்தும், பெரியாரிஸ்டுகளிடம் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மிரட்டல்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கோபி நயினார் . தனதுக்கு வழங்கப்பட்ட பெரியார் விருதை திருப்பி அளிப்பதாக கோபி நயினார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன். அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே. அதற்காக தான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது.
நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும் போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது.
அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது.
இது போன்ற காரணுங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்.
பொதுவெளியில் இழிவுபடுத்தப்பட்டேன் தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும் அவர்களின் வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன்.
தன்னை ஜனநாயக அமைப்பு என்று கூறிக்கொள்கின்ற ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்கொள்கிறது. இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது சர்வாதிகார போக்கின் மனநிலை.
தமிழகம் முழுவதும் தலித் மக்களின் நிலை இது தான் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு, திராவிட சிந்தாந்தவாதி களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது.
இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்பட வும் நேரிடலாம்.
இந்திய முழுக்க நடக்கின்ற அறிவுஜீவிகளின் சமூக செயற்பாட்டாளர்கள் கலைஞர்கள் மீது நடந்த படுகொலைக்கும், எதிர்காலத்தில் எனக்கு நிகழ போகும் படுகொலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.