காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே முழு ஊரடங்கு விதியை மீறிய செயல்பட்ட உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி சாலையில் உள்ள உணவகத்தில் முழு ஊரடங்கு விதியை மீறி வாடிக்கையாளர்களை உணவகத்தில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த உணவகத்திற்கு அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக ரூ.500 அபராதம் விதித்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.