போர்ட் மோர்ஸ்பி:

ப்புவா நியூகினியாவில் இன்று அதிகாலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளது.

புலோலோ நகரத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கு  அடியில் 127 கிமீ ஆழத்தில் இது ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட  பாதிப்பு குறித்து  இன்னும் தகவல் வெளியாகவில்லை. அதுபோல, அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

பப்புவா நியூகினியா கடல்பகுதியில், அதன் ஒட்டிய சாலமன் கடல் பகுதியிலும் மிக அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம்  இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.