லாகூர்

சுமார் 1 மாதம் சிறையில் இருந்த பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தேசத்துரோகம், ஊழல் உள்ளிட்ட வழக்குகளும் இதில் அடங்கும்.

கடந்த மாதம் 9 ஆம் தேதி அன்று ஊழல் வழக்கில் இம்ரான்கானை அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்த அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.  இம்ரான்கான் கைது செய்யப்பட்ட போது அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தன.

போராட்டக்காரர்களை வன்முறைக்குத் தூண்டியதாக இம்ரான்கான் ஆதரவாளரும் தெக்ரிக்-இ-இன்சப் கட்சியின் மூத்த நிர்வாகியும்,  முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா முகமது குரேஷியை காவல்துறையினர் கடந்த 9-ம் தேதி கைது செய்து ராவல்பெண்டி சிரையில் குரேஷி அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யும்படி குரேஷி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்று  அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் ஷா முகமது குரேஷியை வழக்கில் இருந்து விடுதலை செய்தது. சுமார் ஒரு மாதமாகச் சிறையில் இருந்த குரேஷி நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று இம்ரான்கானை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார்.