ஸ்ரீநகர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி 28 பேரை சுற்றுக்கொன்றவர்களில் ஒருவரான பயங்கரவாதி ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும்,  ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் ஏராளமானோர் குழுமியிருந்து இயற்கையை ரசித்து வந்த நேரத்தில், அங்கு இந்திய ராணுவ உடையுடன் வந்த பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் கடந்த (ஏப்ரல்) 22-ம் தேதி சுற்றுலா பயணிகள், குறிப்பாக இந்து பயணிகளை சுட்டுக் கொன்றனர்.  இந்த நிகழ்வில் மொத்தம் 2 6+2 என மொத்தம் 28  பேர் கொல்லப்பட்ட நிலையில், 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவரான  பயங்கரவாதி ஹாசிம் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பிரிவான எஸ்.எஸ்.ஜி.,யை சேர்ந்தவன் என்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இவனது வரைபடத்தை ராணுவம் வெளியிட்டு, தேடி வந்த நிலையில்,  அவன் ஒரு முன்னாள் ராணுவ வீரன் என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

ஹாசிம் மூஸா இவன் காஷ்மீரில் நடந்த 3 பயங்கரவாத தாக்குதல்களில் பங்கேற்றுள்ளான் என்பதும், இவனை பயங்கரவாத அமைப்பான,  லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கு பாகிஸ்தான் ராணுவம் அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் உளவு அமைப்பினருக்கு உள்ளது.

பஹல்காம் தாக்குதல் விசாரணையில், மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் 15 பேரிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல் உறுதியானது.