பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்கவும் அரசின் நிலைப்பாடு குறித்து அறியவும் நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்தியா முழுவதும் கொந்தளித்துள்ளது.

பயங்கவரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா ஒற்றுமையுடனும் திடமாகவும் இருப்பதை உணர்த்த நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் கூட்டப்பட்ட வேண்டும்.

இதன் மூலம் தீவிரவாதத்துக்கு எதிராக மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஒற்றுமையையும் உறுதிப்பட்டையும் வெளிப்படுத்த முடியும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.