சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விடவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel