சென்னை

ந்திய வானிலை ஆய்வு மையம் 3 நாட்களுக்கு கேரளா மற்றும் தமிழக்த்துக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”தமிழக கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணத்தால் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் ஆகஸ்ட் 16 வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ் 11 இல் கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும். ஆகஸ்ட் 12,13-தேதிகளில் கோவை மற்றும் தேனி மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

எனவே இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரளாவிலும் இன்று முதல் வரும் 13 ஆம் தேதிவரை கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.