சென்னை:

சென்னை போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை முதல்வர் ஓ,பன்னீர்செல்ம், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தற்போது சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பிறகு முதல்வர் பதவியையும் சசிகலா ஏற்க காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்று உதயகுமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் சசிகலாவை முதல்வர் பதவியை ஏற்க சொல்ல பேட்டி கொடுத்தனர். இன்று காலை முதல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட கட்சியின் முக்கியர் நிர்வாகிகள் பலர் இந்த கருத்தை வலியுறுத்தி பேட்டி கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் முதல்வர், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் திடீரென சசிகலாவை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் சசிகலாவை முதல்வராக பதவி ஏற்க கோரி நேரில் வலியுறுத்தி இருப்பார்கள் என கூறப்படுகிறது.