சென்னை: பிரதமர் மோடி ஒபிஎஸ்-ஐ சந்திக்க மறுத்த நிலையில், கோபமடைந்த ஓபிஎஸ் இன்று தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர் முதல்வர் ஸ்டாலின் நடைபயணத்தின்போது திடீரென அவரை பூங்காவில் சந்தித்து பேசினார். இது தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்குள்ளாகி உள்ளது.
இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். ஓபிஎஸ் திமுக அல்லது தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இன்று அதிகாலை முதல்வருடன் சந்தித்து பேசியிருப்பது அரசியல் மட்டத்தில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.

கடந்த தேர்தலின்போது பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் அணி மற்றும் தேமுதிக போன்றவை எடப்பாடிமீதான அதிருப்தி காரணமாக கூட்டணி மாறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இன்று முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ், பிரேமலதா என அடுத்தடுத்து சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியல் களம் மேலும் தகிக்க தொடங்கி உள்ளது.
ஓதமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை இன்று காலை பூங்காவில் நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது, ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து ஓபிஎஸ் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
சென்னை, அடையாறு பூங்காவில் இன்று காலை நடைப்பயிற்சி சென்றபோது இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். சென்னையில் வியாழக்கிழமை (இன்று) முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்தார். கடந்த மக்களவைத் தோ்தலின்போது அந்தக் கூட்டணி சாா்பில் போட்டியிட்டிருந்தார். இந்த நிலையில், உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்னை வந்தபோது அவரை ஓ. பன்னீா்செல்வம் சந்திக்கவில்லை. அதுபோல, கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்துக்கு பிரதமா் மோடி வந்தபோது அவரைச் சந்திக்க ஓ. பன்னீா்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மற்றவர்களை பிரதமா் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தி அடைந்த ஓ. பன்னீா்செல்வம், முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக அவரது ஆதரவாளா்கள் தெரிவித்திருந்தனர். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த ஓ. பன்னீா்செல்வம், சென்னையில் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அனைத்துக் கேள்வி களுக்கும் பதிலளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை முதல்வரை சந்தித்தது எதிர்பாராத விதமாக நடந்த சந்திப்பா, அல்லது முதல்வரை சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் பூங்காவுக்கு வந்தரா என்பது உறுதிசெய்யப்படவில்லை.
முதலமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா…