‘ஆபரேஷன் சிந்து’ மூலம் இதுவரை 4,415 இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமூக ஊடகமான ‘X’ இல் தெரிவித்தார்.

இதுவரை, ‘ஆபரேஷன் சிந்து’ மூலம் 4,415 இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர், இதில் ஈரானில் இருந்து 3,597 பேரும் இஸ்ரேலில் இருந்து 818 பேரும் அடங்குவர். இதற்காக 19 சிறப்பு விமானங்களும், 3 விமானப்படை விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
“வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு ஆர்மீனியாவின் யெரெவனில் இருந்து ஒரு சிறப்பு விமானம் புது தில்லியில் தரையிறங்கியது.” “இந்த விமானத்தில் 173 இந்தியர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
மேலும், நேபாளத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் இந்திய நாட்டவரின் ஈரானில் பிறந்த மனைவி உட்பட 14 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
[youtube-feed feed=1]