குவெட்டா

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள ஒரு மசூதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரு காவல்துறையினர் உயிரிழந்துள்ளார். 

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள மசூதியில் நேற்று இரவு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துத் தீப்பிடித்தது.

இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விபத்தில் ஒரு காவல்துறையினர் உயிரிழந்து 5 காவல்துறையினர் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.

அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தொழுகை நடைபெற்றபோது தங்களுக்குத் தேநீர் தயாரித்தபோது சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதாகக் காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்தார்.