ஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறையில் காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.

டந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் க கடும் பொருளாதார நெருக்கடி நிலவி பணவீக்கம் ஏற்பட்டு கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலை உயர்வை கண்டித்தும், மேல்தட்டு மக்களுக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்ய கோரியும் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த தகவலறிந்த காவல்துறைய்னர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தியபோது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட வன்முறையில் பொதுமக்கள் தாக்கியதால் காவல்துறை அதிகாரி ஒருவர் பலியாகி 78 காவல்துறையினர் உள்பட 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதியில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.