சென்னை
அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வாக்கு போடப்பட்டுள்ளது/

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவரை கைது செய்தனர்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரித்தபோது, ஞானசேகரன் ஏற்கனவே திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்களும் வெளியாகின. இதையொட்டி அந்த வழக்குகளையும் போலீசார் தூசி தட்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் விசாரணையை முடித்த சிறப்பு புலனாய்வு குழு ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் தற்போது நிலுவையில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என தமிழக டி.ஜி.பி., ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது தற்போது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புதிய வழக்கு தொடர்பாக ஞானசேகரனை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி அனுமதி கேட்டதற்க்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.