பெங்களூரு

த்திய ரயில்வே அமைச்சகம் சென்னை – மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஏற்கனவே சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் ரயில் சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது.  தற்போது அந்த பாதையில் மேலும் ஒரு வந்தேபாரத் ரயில் சேவை தொடங்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி முதல் செயல்பட  உள்ளது.

இந்தப் புதிய வந்தே பாரத் ரயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயங்கும். இந்த ரயில் மைசூருவில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு சென்னையைச் சென்றடையும்.

வழியில் மண்டியா, பையப்பனஹள்ளி விஸ்வேசுவரய்யா ரயில் நிலையம் (பெங்களூரு), கே.ஆர்.புரம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கு மைசூரு ரயில் நிலையத்தில் பராமரிப்பு வசதிகள் செய்யப்படும் வரை இந்த ரயில் பெங்களூரு-சென்னை இடையே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே ரயில் மறுமார்க்கமாக  சென்னை எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.20 மணிக்கு மைசூரு வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.