வாஷிங்டன்

மெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் மேலும் ஒரு இந்தியர் இடம் பெற்றுள்ளார்.

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கிறது.  தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் குடியரசு கட்சியின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுவதாக அறிவித்து, அதற்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.

குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பை தவிர்த்து இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலோ, விவேக் ராமசாமி உள்பட 13 பேர் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த போட்டியில் மேலும் ஒரு இந்திய வம்சாவளி இணைந்துள்ளார். இந்திய வம்சாவளி பொறியாளரான ஹிர்ஷ் வர்தன் சிங் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.