மும்பை

மும்பையில் ரன்பீர் கபூர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மரனம் அடைந்துள்ளார்.

மும்பை மேற்கு அன்ந்தேரி பகுதியில் சித்ரகூட் படப்பிடிப்பு தளம் அமைந்துள்ளது.  இதில் பெயரிடப்படாத ஒரு இந்தி திரைப்பட படப்பிடிப்பு நடந்துக் கொண்டு உள்ளது.  இதில் ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்.  வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று இந்த படம் வெளியாக உள்ளது.

திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால், கரும்புகை வான்வரை பரவியது. அப்போது காற்றில் பரவிய புகையால் அந்த பகுதியே புகை மண்டலம் போல் காட்சியளித்தது., படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  நீண்டநேர போராட்டத்திற்குப் பின்னர் நேற்றிரவு 10.35 மணியளவில் மும்பை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதுபற்றி கூப்பர் மருத்துவமனையின் மருத்துவர் சதாபுலே ”மும்பை அந்தேரியின் மேற்கு பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு வரும் வழியிலேயே 32 வயது ஆண் ஒருவர் உயிரிழந்து விட்டார்” எனத் தெரிவித்து உள்ளார்.

இந்த படத்துக்காக நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு மும்பை திரும்பினர். அவர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த நிலையில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டு உள்ளது.  இந்த படத்தில் போனி கபூர் மற்றும் டிம்பிள் கபாடியா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.