சென்னை: தமிழ்நாட்டுக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியுடனான காணொளி காட்சி கலந்துரையாடலின்போது, முதல்வர் ஸ்டாலின்  கோரிக்கை வைத்துள்ளார்.

மிழ்நாட்டுக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டுக்கான தடுப்பூசி ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர்  மோடி தலைமையில் இன்று காணொலிக் காட்சி மூலமாக மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம்..