சென்னை:
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னைக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் செப்.8ம் தேதி வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை விடப்படும் என்றும், அதற்கு பதிலாக வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel