உலகில் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டு வரும் நிலையில், பத்திரிக்கை சுதந்திரத்திற்காக தங்கள் நாடுகளில் போராடிய இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுபவர்களின் அறிவிப்பு வெளியாகிக்கொண்டிருக்கிறது, அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

 

ரெஸ்ஸா – முரடோவ்

பிலிபைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரெஸ்ஸா மற்றும் ரஷ்யா-வைச் சேர்ந்த பத்திரிகையாளர் முரடோவ் ஆகிய இருவருக்கும் இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பத்திரிக்கை சுதந்திரத்திற்காக உழைத்துவரும் பத்திரிகையாளர்களின் பிரதிநிதிகளாக இவ்விருவருக்கும் இந்த பரிசு வழங்கப்பட்டிருப்பதாக நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.