சென்னை: வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டமில்லை எதுவும் இல்லை என டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டாஸ்மாக்  மதுபானங்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து, வீடுகளுக்கு நேரடி செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வது தொடர்பான   தகவலுக்கு டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டமில்லை. இதுபோன்ற எந்த புது முயற்சியிலும் டாஸ்மாக் நிர்வாகம் இறங்கத் திட்டம் இல்லை எனவும் கூறியுள்ளது.

இது தொடர்பாக ப டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டமில்லை. இதுபோன்ற புது முயற்சியிலும் டாஸ்மாக் நிர்வாகம் இறங்க திட்டம் இல்லை. இதேபோல் டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமில்லை.

இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.