சென்னை: தமிழ்நாட்டில் #MPox எனப்படும் குரங்கம்மை  பாதிப்பு இல்லை என்றும், அதுபோல வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழ்நாடு வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை தமிழ்நாடு சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.என பொது சுகாதாரத் துறை இயக்குநர்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று வரவல்  அதிகரித்து வருகிறது.  இதனால் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே  காணப்பட்டு வந்த குரங்கம்மை நோய், தற்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகள் விமான நிலையங்களில் சோதனை மையம் அமைத்து, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு  சோதனை செய்து வருகிறது.

இந் தநிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம்,  தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி, சர்வதேச விமானங்களில் பயணித்து வருபவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இது கொரோனா காலங்களிலிருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பரிசோதனைகளில் பயணிகளுக்கு காய்ச்சல் இல்லை எனில் பச்சை நிறத்திலும், காய்ச்சல் இருந்தால் சிவப்பு நிறத்திலும் விளக்கு எரிந்து எச்சரிக்கை ஒலி எழும். முழு நேரமும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் நோயாளிகளை அடையாளம் கண்டு விமான நிலையத்திலேயே, அவர்களை தனிமைப்படுத்தும் அறையில் தங்க வைத்து முதலுதவிகளை செய்வார்கள்.

தேவைப்பட்டால் உயர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள். தமிழ்நாட்டில் இதுவரை ஒருவருக்கு கூட குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. சொல்லப்போனால், இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த எவருக்கும் அத்தகைய அறிகுறிகள் தென்படவில்லை. இருந்தபோதிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்” என கூறினார்.