டில்லி

த்திய அமைச்சர் நிதின் கட்காரி வரும் டிசம்பருக்குள் சென்னை- பெங்களூரு பசுமை வழிச்சாலை பணிகள் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.    இன்றுடன் முடிவதாக இருந்த இக்கூட்டம் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு நாளை முடிவடைகிறது.  நேற்று மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர். தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு,

“நாங்கல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசி உள்ளோம். நெடுஞ்சாலை ஆணையம் கட்டுமான பணிகளில் எதிர்கொள்ளும் சவால்களைத் தெரிவித்துள்ளோம். நாங்கள் இந்த விஷயத்தை அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் சாலையை அமைக்க போதுமான எல்லாவற்றையும் பெறாமல் எப்படி பணிகளை முடிக்க முடியும். இதுதொடர்பாக மாநில அரசு அதிகாரிகளுடன் விவாதித்து, சுமுகமான தீர்வுகளை வேகமாக எட்ட நான் தயாராக உள்ளேன்”

என்று அமைச்சர் தெரிவித்தார்.

கேரள நாடாளுமன்ற உறுப்பினர். என்.கே.பிரேமசந்திரன் கேட்ட கேள்விக்கு,

“கேரளாவின் கொல்லம் தமிழகத்தின் மதுரையை இணைக்கும் என்.எச்.774 பசுமை வழிச்சாலை திட்டத்தில், நிலம் கையகப்படுத்தும் செலவில் 50 சதவீதத்திற்குப் பதிலாக 25 சதவீத செலவை மத்திய அரசு ஏற்கும் திட்டத்தைக் கேரள அரசு ஏற்றக்கொண்டுவிட்டது. மேலும் மாநில ஜி.எஸ்.டி. 9 சதவீதத்தைக் கைவிடவும் தயாராக இருந்தது. அவர் கேரள முதல்வர ஏற்றுக்கொண்டாலும் நாங்கள் அவர்களின் முறையான பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.”

என்று பதில் அளித்தார்.

பிறகு அமைச்சர் கட்காரி,

“தமிழக மற்றும் கேரள மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் திட்டப்பணிகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், அனுமதிகள் கிடைக்கத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உதவ வேண்டும். அப்போதுதான் பணிகள் துரிதமாக முடிவடையும். இந்த சபைக்கு நான் நம்பிக்கை தெரிவிக்கிறேன், வரும் டிசம்பர் மாதத்திற்குள் சென்னை-பெங்களூரு பசுமை வழிச்சாலை பணிகளை முடிக்க முயல்கிறோம். இந்த பணிகள் முடிந்தால் சென்னை-பெங்களூரு இடைப்பட்ட தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்க முடியும்.”

என்று அறிவித்தார்.