ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படம், வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு ஆகியோர் நடித்துள்ளனர். ஏப்ரல் 2 ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் கொரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .

இதனிடையே, இந்தப் படத்தை டிஜிட்டலில் படக்குழு வெளியிட முடிவு செய்ததாகவும், இதனால் அனுஷ்காவுக்கும் படக்குழுவினருக்கும் மனவருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் இணையத்திலும் வைரலானது.

இதற்கு படக்குழுவினர் தங்களுடைய ட்விட்டர் பதிவில் ;-

“படப்பிடிப்பு ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இன்று வரை, எங்கள் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும், நல்லது கெட்டது என அனைத்திலும் எங்களுக்கு ஆதரவாக தூண்களைப் போல் நிற்கிறார்கள். முக்கியமாக அனுஷ்கா ஷெட்டி அவர்கள்.

அடிப்படையற்ற எந்த புரளிகளையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். எதாவது பெரிய முன்னேற்றம் இருந்தால் அதை அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிப்போம்” என பதிவிட்டுள்ளார் .

[youtube-feed feed=1]