டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் நாளை திறக்கப்படுகிறது, இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சி அட்டவணைப்படி காலை 7:15 மணிக்கு பிரதமர் மோடி நாடாளுமன்ற புதிய கட்டிடத்திற்கு வருகை தருகிறார்.

இதனைத் தொடர்ந்து காலை 7:30 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மங்கள் சடங்குகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன. 8:30 மணிக்கு பிரதமர் மோடி மக்களவை அறைக்கு வருகை தருகிறார்.

1947 ம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றதை கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனம் நேருவிடம் வழங்கி அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 75 ஆண்டு பழமையான செங்கோல் புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகே 9:00 மணிக்கு நிறுவப்படுகிறது.

பின்னர், காலை 9:30 மணிக்கு நாடாளுமன்றத்தின் முகப்பறையில் பிரார்த்தனை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் நிறைவடைந்ததும் பிரதமர் மோடி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை விட்டு செல்கிறார்.

சிறிது இடைவேளைக்குப்பின் காலை 11:30 மணிக்கு விருந்தினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருகின்றனர்.

நண்பகல் 12 மணிக்கு பிரதமர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பிறகு தேசிய கீதத்துடன சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

பிற்பகல் 1:05 மணிக்கு 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிடும் பிரதமா 1:10 மணிக்கு உரை நிகழ்த்துகிறார் பிறபகல் 2 மணிக்கு விழா நிறைவு பெறுகிறது.